கடலூரில் நாளை இலவசமாக 2,000 லி. பால் வினியோகம்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கத்தின் சார்பில் நாளை புயல் பாதித்த கடலூரில் 2,000 லிட்டர் பால் இலவசமாக விநியோகம் செய்யப்படுகிறது.

இது குறித்து அச்சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.ஏ.பொன்னுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கடலூரில் தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிடும் பொருட்டு, எங்களது சங்கம் சார்பில் 2,000 லிட்டர் பால் இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம். 6-1-2012 அன்று (இன்று) இரவு 10.30 மணியளவில், சென்னை திருமங்கலம் காவல் நிலையம் அருகில் இருந்து நிவாரணப் பொருட்களுடன் கடலூர் நோக்கி புறப்படுகிறோம்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் மாநில தலைவர் சவுந்தர்முருகன், அம்பத்தூர் நகர அ.தி.மு.க. செயலாளர் வி. அலெக்ஸாண்டர் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

கடலூரில் 7-1-2012 அன்று (நாளை) தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்துடன் இணைந்து, அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஜெயச்சந்திரன் முன்னிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக பால் விநியோகம் செய்ய இருக்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+