கரும்பு டன்னுக்கு ரூ.2,100 - தமிழக அரசுக்கு இந்திய ஜனநாயக கட்சி பாராட்டு
சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு வரபிரசாதமாக கரும்பு டன்னுக்கு ரூ.2,100 என்று தமிழக அரசு அறிவித்துள்ளதை இந்திய ஜனநாயக கட்சி வரவேற்றுள்ளது.
இது குறித்து இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டி.ஆர்.பச்சமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையி்ல் கூறியிருப்பதாவது,
படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் தனித் திறமையை வளர்த்திடும் வகையில் தமிழக அரசு ரூ.13.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது பாராட்டுக்குரியது. தற்போது 50 லட்சம் படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் இருக்க முக்கிய காரணம் அவர்களுக்கு தனித்திறன் இல்லாதது தான். எனவே அவர்களுக்கு தனித்திறன் பயிற்சி அளிக்கும் இந்த செயலை பாராட்டுகிறோம்.
கரும்பு டன்னுக்கு அரசின் ஆதரவு விலையை ரூ.2,100 ஆக உயர்த்தியதையும் பாராட்டி, வரவேற்கிறோம். இதேபோல கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.10,000. இதர பயிர்களுக்கு ரூ.7,500 நிவாரண தொகையாக வழங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications