நதிகளை இணைத்தால் நீருக்காக யாரிடமும் கையேந்த வேண்டியிருக்காது-கலாம்

முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினையை இருமாநில முதல்வர்களும் பேசி தீர்வுகாணவேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அப்துல்கலாம் பேசியதாவது,
உழுதவன் கணக்கு
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர் வடிவேலன் எழுதிய "உழுதவன் கணக்கு', காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சோமராமசாமி எழுதிய "செயற்கைகோளின் பார்வையில் தமிழக நதிகள்' என்ற இரண்டு நூல்களையும் கடந்த வாரம் வாசித்தேன். துல்லியப் பண்ணைத் திட்டம் மூலம் குறைந்த செலவில் அதிக விளைச்சல் விளைவிப்பது எப்படி? என்பது குறித்து உழுதவன் கணக்கு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயிகளும், தொழில்முனைவோரும் இதுபோன்ற புத்தகங்களை படிப்பது மிகவும் அவசியம்.
செயற்கைகோளின் பார்வையில் தமிழக நதிகள் என்ற நூலில் தமிழக நதிகளின் பிறப்பிடம், அது பிறந்து ஓடும் மலைப்பகுதி, சமவெளிப்பகுதி உள்ளிட்டவை குறித்தும், நதிகள் ஓடுவதால் நிலத்தின் மேற்பரப்பு, பூமிக்குள் வரும் மாற்றங்கள் குறித்தும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நதிகளை இணைக்க வேண்டும்
தமிழகத்தில் பாயும் காவிரி, தாமிரபரணி, பாலாறு உள்ளிட்ட நதிகளை இணைத்து நீர்வழிச்சாலை அமைத்தால் 100 டிஎம்சி தண்ணீரை தேக்கிவைக்க முடியும். இதன் மூலம் தமிழகம் வளமான மாநிலமாக மாறும். நதிகளை இணைத்து வளமான தமிழகத்தை அமைக்க அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், கவிஞர்கள் இதற்காக ஒருங்கிணைந்து கனவு காண வேண்டும். அந்தக் கனவு நனவாகும் வரை தூங்கக்கூடாது. தூக்கத்தில் வருவதல்ல கனவு. தூங்கவிடாமல் செய்வதுதான் கனவு என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications