காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக ஹனீஷ் சாப்ரா நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியராக ஹனிஷ் சாப்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து ஐ.ஏ,எஸ், ஐ,பி.எஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்துவருகிறது. இதன் ஒருபகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த சிவசண்முகராஜா, இம்மாத துவக்கத்தில் கட்டாய விடுப்பில் செல்ல அறிவுறுத்தப்பட்டார். இதையடுத்து, காஞ்சிபுரம் டி.ஆர்.ஓ., சுதர்சனம், மாவட்ட கலெக்டர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.
புதிய ஆட்சியர் நியமனம்
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பதவிக்கு, சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதிப்பிரிவு துணை கமிஷனர் ஹனிஷ் சாப்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன், காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் கலெக்டராக பணியாற்றினார். டில்லியைச் சேர்ந்த இவர், கடந்த 2006ல், ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்தார்.












Click it and Unblock the Notifications