வேலூர், குமரி, நெல்லை கலெக்டர்கள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
சென்னை: வேலூர், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்களை நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக இருந்த எஸ்.மதுமதி, சென்னை கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார். முன்னதாக, சென்னை மாவட்ட கலெக்டர் பொறுப்பில் மாவட்ட வருவாய் அதிகாரி கே.ஏ. அண்ணாமலை இருந்தார். மேலும், வேலூர், கன்னியாகுமரி மாவட்டங்களின் கலெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறி்ப்பில் கூறியிருப்பதாவது,
நெல்லை மாநகராட்சி கமிஷனராக இருந்த அஜய் யாதவ், வேலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகின்றார். வேலூர் மாவட்ட கலெக்டர் எஸ்.நாகராஜன், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக இருந்த எஸ்.மதுமதி, சென்னை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார், என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications