பாக். பிரதமர் கிலானிக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்: 19ல் நேரில் ஆஜராக உத்தரவு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் கிலானி நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் வரும் 19ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அவருக்கு உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி உள்பட பல தலைவர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை அந்நாட்டு அரசு விசாரணைக்கு எடுக்காமல் வழக்கை முடித்துவிட்டது. அந்த வழ்ககுகளை எல்லாம் மறுபடியும் விசாரணைக்கு எடுக்குமாறு உச்ச நீதி்மன்றம் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஜனவரி 16ம் தேதி அதாவது இன்றுக்குள் அந்த வழக்குகளை விசாரணைக்கு எடுக்குமாறு அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்தது.
அந்த கெடு இன்றுடன் முடிகிறது. இருப்பினும் அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து ஊழல் வழக்குகளை விசாரணைக்கு அரசு எடுக்காதது குறித்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசராணைக்கு வந்தது. வழக்கு விசாரித்த நீதிமன்றம் பிரதமர் கிலானிக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் வரும் 19ம் தேதி நேரில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளது.
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட பிறகு ராணுவம் தனது ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்வதாகவும், தனகது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள உதவுமாறும் அதிபர் சர்தாரி அமெரிக்க உயர் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதம் வெளியானது குறித்த வழ்ககு விசாரணையும் இன்று துவங்கியுள்ளது.
இதற்கிடையே அந்த கடிதம் வெளிச்சத்திற்கு வரக் காரணமாக இருந்த பாகிஸ்தானிய-அமெரிக்க தொழில் அதிபரான மன்சூர் இஜாஸ் இன்று பாகிஸ்தானுக்கு வந்து இந்த விவகாரம் குறித்து வாக்குமூலம் கொடுப்பதாக இருந்தது. ஆனால் விசா பிரச்சனையால் வர முடியவில்லை என்றும், வரும் 25ம் தேதி வரை தனக்கு காலஅவகாசம் தருமாறும் அவர் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications