மார்ச் 14ல் ரயில்வே பட்ஜெட்; 16ல் மத்திய பட்ஜெட் தாக்கல்
டெல்லி: வரும் மார்ச் மாதம் 16ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் வழக்கமாக பிப்ரவரி மாத இறுதியில் தான் துவங்கும். ஆனால் உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் தாமதாக மார்ச் மாதம் துவங்குகிறது.
5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு முடிய மார்ச் 9ம் தேதி ஆகும். எனவே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மார்ச் 12ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்குகிறது. 12ம் தேதி கூட்டத் தொடர் துவங்கினால் 14ம் தேதி குடியரசுத் தலைவர் உரையாற்றுவார். மேலும் அன்றே ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மார்ச் 15ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகின்றது.
மார்ச் 14ம் தேதி 2012-2013ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அரசு தீர்மானித்திருந்தது. ஆனால் தற்போது 2 நாட்கள் தாமதாமாக அதாவது மார்ச் 16ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்று கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications