ராகுல்காந்தி விரும்பினால் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்: பிரியங்கா

Subscribe to Oneindia Tamil

Rahul Gandhi and Priyanka
டெல்லி: ராகுல்காந்தி கேட்டுக் கொண்டால் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று அவரது சகோதரி பிரியங்கா தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா பிரசாரம் செய்து வருகிறார். அமேதி, ரே பரேலி தொகுதிகளில் பிரியங்கா இன்று பிரசாரம் செய்கிறார். ஆனால், அவர் பொதுக்கூட்டம் எதிலும் பேசவில்லை.

இந்த நிலையில் ராகுல் காந்தி விரும்பினால் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று அவர் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், இப்போதைக்கு அமேதி மற்றும் ரே பரேலியில் தேர்தல் பிரசாரம் செய்யவிருக்கிறேன். தீவிர அரசியலில் ஈடுபடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. ராகுல் காந்தி விரும்பினால் எதையும் செய்வேன் என்றார்.

முன்னதாக உத்தரப் பிரதேசத்தில் கட்சியின் மத்தியில் பேசிய பிரியங்கா, உங்களது உட் கட்சிப் பூசலையெல்லாம் குழி தோண்டி புதைத்துவிட்டு காங்கிரசின் வெற்றிக்காக தீவிரமாக செயல்பட வேண்டும். கோஷ்டிப் பூசலை கட்சி சகித்துக் கொள்ளாது. கோஷ்டிகளாக செயல்படுவோரை கண்டறிய கிராம அளவில் ரகசிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தவறு செய்வோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சட்டசபைத் தேர்தலை ஒட்டி பல்வேறு மாநிலங்களில் சோனியா குடும்பத்தினர் பிரசாரம் செய்து வருகின்றனர். சோனியா உத்தரகண்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரியங்காவும், ராகுலும் உத்தரப் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+