ஞாயிற்றுக்கிழமைகளில் நியாயவிலைக் கடை : அரசு அறிவிப்பு
சென்னை : அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் ரேசன் அட்டைகளை புதுப்பிக்க வசதியாக ஞாயிறுக்கிழமைகளில் நியாயவிலைக்கடைகள் திறந்திருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
2012ஆம் ஆண்டில் குடும்ப அட்டைகளை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அரசு பணியாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் தங்களது பணியின் காரணமாக நியாய விலை கடைகளுக்கு சென்று தங்களது குடும்ப அட்டைகளை பணி நாட்களில் புதுப்பிக்க இயலவில்லை என்றும், எனவே தங்களுடைய குடும்ப அட்டைகளை புதுப்பிப்பதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் நியாயவிலைக் கடைகளை திறந்து வைத்து புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளனர்.
கடைகள் திறக்க முடிவு
எனவே, அரசு பணியாளர்கள் மற்றும் தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்களுடைய குடும்ப அட்டைகளை புதுப்பிப்பதற்கு ஏதுவாக, 22.1.2012, 29.1.2012, 5.2.2012 மற்றும் 12.2.2012 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில், நியாயவிலைக் கடைகளை திறந்துவைத்து குடும்ப அட்டைகளை புதுப்பித்தல் மற்றும் பொருள்கள் வழங்கும் பணியினை மேற்கொள்ள அனுமதித்தும் அதற்கு பதிலாக 23.1.2012, 30.1.2012, 6.2.2012 மற்றும் 13.2.2012 ஆகிய தேதிகளை நியாயவிலைக் கடை பணியளர்களுக்கு விடுமுறை தினங்களாக அறிவித்தும் ஆணையிட்டுள்ளது. இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications