ஈரானில் நிலநடுக்கம் 200 பேர் படுகாயம்: தொலை தொடர்ப்பு துண்டிப்பு
டெக்ரான்: ஈரானின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நில நடுகத்தில் பெரும்பாலான கட்டடங்கள் நொறுங்கியுள்ளன. 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள நெய்ஷாபார் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானது. நிலநடுக்கத்திற்கு அப்பகுதியில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்தன.
இந்த இடிபாடுகளில் சிக்கி 200 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலநடுக்கம் காரணமாக இந்த பகுதியில் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ம் தேதி தென்கிழக்கு ஈரானில் 6.5 ரிக்டெர் அளவிற்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏழு பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications