கடும் எதிர்ப்பால் சல்மான் ருஷ்டியின் வீடியோ உரை ரத்தானது

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்து வரும் இலக்கிய விழா பெரும் சர்ச்சைகளுடன் கூடியதாக மாறி விட்டது - சல்மான் ருஷ்டியின் புண்ணியத்தால். முதலில் அவர் விழாவுக்கு வருவதாக இருந்தது. ஆனால் ராஜஸ்தான் போலீஸார் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக கூறவே தனது பயணத்தை ரத்து செய்தார் ருஷ்டி.
ஆனால் பொய் சொல்லி தன்னை வர விடாமல் போலீஸார் தடுத்து விட்டதாக பின்னர் குற்றம் சாட்டினார் ருஷ்டி. இதை ராஜஸ்தான் அரசு மறுத்தது.
இந்த நிலையில், ருஷ்டியின் சாத்தானிக் வேர்சஸ் நூலிலிருந்து சில பகுதிகளை விழாவில் வாசித்ததால் நான்கு எழுத்தாளர்களை வெளியேற உத்தரவிடப்பட்டது. இதுவும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று ஜெய்ப்பூர் விழாவில் ருஷ்டி உரை நிகழ்த்தவிருந்தார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிகழ்ச்சிக்கு மாநில அரசும் கூட கடைசி நிமிடம் வரை அனுமதி தரவில்லை. இதையடுத்து விழா அமைப்பாளர்கள், மாநில அரசுடனும், காவல்துறையுடனும் பேசினர்.
இந்த நிலையில் விழா நடைபெறும் இடத்தில் ருஷ்டியின் பேச்சை எதிர்த்துப் போராட்டங்கள் வெடித்தன. இதனால் அங்கு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். பெருமளவில் கூட்டம் இல்லை என்ற போதிலும் வன்முறை மூளக் கூடும் என போலீஸார் எச்சரித்தனர். இதையடுத்து சல்மானின் வீடியோ உரை ரத்து செய்யப்படுவதாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அறிவித்தனர். இதனால் ருஷ்டியின் பேச்சு இடம் பெறவில்லை.
முன்னதாக இன்று மாலை 3.45 மணிக்கு வீடியோ உரையை ருஷ்டி நிகழ்த்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. லண்டனில் உள்ள ஒரு ஸ்டுடியோவிலிருந்து அவர் பேசுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications