ராகுல் மீது ஷூ வீசப்பட்டத்ற்கு கிரிமினல் ராம்தேவே காரணம்: திக்விஜய் சிங்
டெல்லி: டேராடூனில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீது ஷூ வீசப்பட்டதற்கு யோகா குரு பாபா ராம்தேவ் தான் காரணம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நேற்று மாலை நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்த குல்தீப் சிங்(26) என்பவர் ராகுல் மீது ஷூவை வீசினார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ராகுல் மீது ஷூ வீசப்பட்டதற்கு பாபா ராம்தேவ் தான் காரணம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
இது போன்ற காரியங்களு்ககு பின்னால் பாபா ராம்தேவ் உள்ளார். மக்களின் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற கமிஷன் பெற்றவர் அவர். அவரிடம் குவிந்துகிடக்கும் சொத்துக்கள் குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அவர் சட்டவிரோதமாக ஸ்காட்லாந்தில் ஒரு தீவையே வாங்கியுள்ளார்.
ராம்தேவ் தன்னை யார் என்று நினைத்து செயல்படுகிறார். அவர் ஒரு கிரிமினல் என்றார்.












Click it and Unblock the Notifications