அப்பாடா, குடியரசு தின விழாவுக்கு தனிப்பட்ட தீவிரவாத மிரட்டல் இல்லை!
டெல்லி: பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக, தீவிரவாத குழுக்களிடமிருந்து, குடியரசு தின விழாவுக்கு தனிப்பட்ட மிரட்டல் எதுவும் இல்லை என்று பாதுகாப்புத்துறையினரும்,மத்திய அரசு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் பொதுவான பாதுகாப்பு எச்சரிக்கையை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. மேலும், தலைநகர் டெல்லியிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் சுதந்திர தின விழா, குடியரசு தின விழா போன்றவற்றின்போது தீவிரவாதிகள் நாச வேலைக்கு திட்டமிடுவதாக உளவுப் பிரிவு தகவல் குறித்து எச்சரிக்கை விடுக்கும். இதையடுத்து அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்படும்.
ஆனால் இந்த ஆண்டு குடியரசு தின விழாவின்போது தீவிரவாதிகள் நாச வேலைக்கு எதுவும் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்ட மிரட்டல் எதுவும் உளவுப் பிரிவுக்கு வரவில்லை. இதனால் பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மட்டுமே இந்த முறை அரசு எடுத்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த முறை எந்தவிதமான குறித்த பாதுகாப்பு மிரட்டலும் வரவிலல்லை. எனவே பொதுவான பாதுகாப்பு உஷார் நிலையை மட்டுமே மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. அதேசமயம், முன்னெச்சரிக்கையாக டெல்லியில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
கடந்த காலங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுறுவியுள்ளார்கள், விமானங்களைக் கடத்தி தாக்கலாம், மனித வெடிகுண்டுகள் ஊடுறுவியுள்ளனர், நக்சலைட்கள் தாக்கலாம் என்று உளவுப் பிரிவுக்குத் தகவல் வரும். ஆனால் இந்த முறை அப்படி எந்தத் தகவலும் இல்லையாம்.
குடியரசு தினத்தையொட்டி டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. நகரின் அனைத்து நுழைவாயில்களிலும் டெல்லி போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று பிற்பகல் 12 மணி வரை குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும் ராஜ்பாத் பகுதியில், விமானங்கள் பறக்க தலைநகரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து பல பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் நகரின் பல பகுதிகளிலும் நிறுவப்பட்டுள்ளது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications