அப்பாடா, குடியரசு தின விழாவுக்கு தனிப்பட்ட தீவிரவாத மிரட்டல் இல்லை!
டெல்லி: பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக, தீவிரவாத குழுக்களிடமிருந்து, குடியரசு தின விழாவுக்கு தனிப்பட்ட மிரட்டல் எதுவும் இல்லை என்று பாதுகாப்புத்துறையினரும்,மத்திய அரசு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் பொதுவான பாதுகாப்பு எச்சரிக்கையை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. மேலும், தலைநகர் டெல்லியிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் சுதந்திர தின விழா, குடியரசு தின விழா போன்றவற்றின்போது தீவிரவாதிகள் நாச வேலைக்கு திட்டமிடுவதாக உளவுப் பிரிவு தகவல் குறித்து எச்சரிக்கை விடுக்கும். இதையடுத்து அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்படும்.
ஆனால் இந்த ஆண்டு குடியரசு தின விழாவின்போது தீவிரவாதிகள் நாச வேலைக்கு எதுவும் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்ட மிரட்டல் எதுவும் உளவுப் பிரிவுக்கு வரவில்லை. இதனால் பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மட்டுமே இந்த முறை அரசு எடுத்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த முறை எந்தவிதமான குறித்த பாதுகாப்பு மிரட்டலும் வரவிலல்லை. எனவே பொதுவான பாதுகாப்பு உஷார் நிலையை மட்டுமே மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. அதேசமயம், முன்னெச்சரிக்கையாக டெல்லியில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
கடந்த காலங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுறுவியுள்ளார்கள், விமானங்களைக் கடத்தி தாக்கலாம், மனித வெடிகுண்டுகள் ஊடுறுவியுள்ளனர், நக்சலைட்கள் தாக்கலாம் என்று உளவுப் பிரிவுக்குத் தகவல் வரும். ஆனால் இந்த முறை அப்படி எந்தத் தகவலும் இல்லையாம்.
குடியரசு தினத்தையொட்டி டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. நகரின் அனைத்து நுழைவாயில்களிலும் டெல்லி போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று பிற்பகல் 12 மணி வரை குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும் ராஜ்பாத் பகுதியில், விமானங்கள் பறக்க தலைநகரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து பல பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் நகரின் பல பகுதிகளிலும் நிறுவப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications