கல்லூரி நிர்வாகிகளை விட்டு தாக்கியதாக டாக்டர் ராமதாஸ் மீது ஆசிரியர் புகார்- வழக்குப் பதிவு
திண்டிவனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் தூண்டுதலின் பேரில் தன்னை திண்டிவனண் வன்னியர் கல்லூரி இயக்குநரும், உதவியாளரும் தாக்கியதாக அந்தக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் மாயகிருஷ்ணன் என்பவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து ராமதாஸ் உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸார் புகார் பதிவு செய்துள்ளளனர்.
திண்டிவனம் வன்னியர் கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர் மாயகிருஷ்ணன். இவர் ஒலக்கூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில், தன்னை, கல்லூரி இயக்குநர் ஹரிகிருஷ்ணன், உதவியாளர் வெங்கடேசன் ஆகியோர் தாக்கினர். டாக்டர் ராமதாஸின் தூண்டுதலின் பேரில்தான் இந்த தாக்குதல் நடந்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து டாக்டர் ராமதாஸ், ஹரிகிருஷ்ணன், வெங்கடேசன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தற்போது காயமடைந்ததாக கூறி மாயகிருஷ்ணன் திண்டிவனம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே திண்டிவனம் கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸின் தம்பி சீனு கவுண்டரை நேற்று சிபிஐ அதிகாரிகள் கைது செய்த நிலையில் தற்போது பேராசிரியர் மாயகிருஷ்ணன் ரூபத்தில் டாக்டர் ராமதாஸுக்கு புது சிக்கல் வந்திருப்பதால் பாமக வட்டாரம் பரபரப்படைந்துள்ளது.












Click it and Unblock the Notifications