வாக்காளர்களுக்கு "போதை" கொடுத்து அசத்தும் பஞ்சாப் கட்சிகள்!
சண்டிகர்: இந்திய மாநிலங்களிலேயே பஞ்சாபில்தான் வாக்காளர்களுக்கு போதைப் ருட்களை விநியோகிக்ப்பட்டிருக்கிறது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கவலை தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மற்றும் உத்தர்காண்ட் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
பஞ்சாபில் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
முன் எப்போதும் இல்லாத வகையில் பஞ்சாபில் பெருமளவு மது பாட்டில்களும் போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த சில வாரங்களாக வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களையும் போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்த தேர்தல் ஆணையம் மலைத்துப் போய் நிற்கிறது.
பறிமுதல் பட்டியல்....
தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டவற்றின் பட்டியல்
- 6 லட்சம் ஒயின் பாட்டில்கள்
- 2 லட்சம் கிலோ மதிப்புள்ள "இஹான்" (கள்ளச்சாராயத்துக்கான மூலப்பொருள்
- 17 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம்
- 2700 கிலோ போதை பொருள்
- 60 கிலோ ஹெராயின்
- ஹெராயின் அல்லாது ரூ250 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள்
என நீள்கிறது
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி, மாநிலங்கள் அனைத்திலும் வாக்காளர்களுக்கு மது விநியோகிப்பது நடைமுறையில் உள்ளது என்றாலும் பஞ்சாபில்தான் இத்தனை நூறு கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் கொடுக்கபடுகிறது என்று அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதேபோல் கடந்த ஒரு மாதத்தில் பஞ்சாபில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்து செல்லப்பட்ட ரூ34 கோடி ரொக்கமும் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications