காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜிதேந்திர யாதவின் மகனை கைப்பிடித்த லாலுவின் 4வது மகள்
டெல்லி: ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவின் 4வது மகள் ராகினிக்கும் சமாஜ்வாடிக் கட்சியில் இருந்து விலகி அண்மையில் காங்கிரஸில் சேர்ந்த எம்.எல்.ஏ. ஜிதேந்திர யாதவின் மகன் ராகுலுக்கும் திருமணம் நடந்தது.
ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவுக்கு 7 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். அதில் 4வது மகள் ராகினிக்கும் சமாஜ்வாடிக் கட்சியில் இருந்து விலகி அண்மையில் காங்கிரஸில் சேர்ந்த காசியாபாத் எம்.எல்.ஏ. ஜிதேந்திர யாதவின் மகன் ராகுலுக்கும் நேற்று திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவில் துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, பாஜக தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத் சிங், லோக் ஜன் சக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
லாலுவின் மனைவி ராப்ரி தேவி பீகார் முதல்வராக இருக்கையில் முதல் 2 மகள்களான மிஸா மற்றும் ரோகினிக்கு திருமணம் நடந்தது. லாலு ரயில்வே அமைச்சராக இருந்தபோது 3வது மகள் சந்தாவுக்கும் ஹரியானாவைச் சேர்ந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானிக்கும் திருமணம் நடந்தது.
லாலுவின் 5வது மகள் ஹேமா மற்றும் 6வது மகள் அனுஷ்காவுக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. ஹேமாவுக்கு டெல்லி மணமகனுடனும், அனுஷ்காவுக்கு ஹரியானா அமைச்சரின் மகன் சிரஞ்சீவ் ராவுடனும் திருமணம் நடக்கவிருக்கிறது. ராவ் ஹரியானா இளைஞர் காங்கிரஸ் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications