நெருங்கும் ஐ.நா. மாநாடு- அலறும் இலங்கை அரசு
கொழும்பு: ஜெனிவாவில் மார்ச் மாதம் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு அவப்பெயர் ஏற்படுத்த தன்னார்வ நிறுவனங்களும் சில அரசியல் கட்சிகளும் சதி செய்வதாக இலங்கை அரசு புலம்பல் வெளியிட்டுள்ளது.
இதற்கு சில இலங்கை ஊடகவியலாளர்களும் உடந்தையாக இருப்பதாக இலங்கை அரசு கூறியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தையொட்டி இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் போராட்டங்கள் எதிர்வரும் வாரங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடத்தவும் சில கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே வடக்கு மற்றும் கிழக்கில் உடனடியாக சிவில் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் என்று தமிழர் பிரதேசமான மட்டக்களப்பில் ஜே.வி.பி.சார்பில் நேற்று துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதேபோல் ஜே.வி.பி.யின் கிளர்ச்சிக் குழுவும் இலங்கை அரசுக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் இக்குழுவினர் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈழத்தில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது பெருமளவிலான தமிழர்களைக் கொன்று குவித்து பெரும் போர்க்குற்றங்களை இழைத்துள்ளது ராஜபக்சே அரசும், அதன் ராணுவமும். இதுதொடர்பாக சர்வதேச அளவில் பல்வேறு தரப்பிலும் வழக்குகள், குற்றச்சாட்டுகள், எதிர்ப்புகள் வலுவடைந்து வருகின்றன. இதனால் எப்போதுமே பீதியில் வாழும் நிலைக்கு ராஜபக்சேவும், அவரது அரசும் தள்ளப்பட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications