ராவணனின் கூட்டாளிகள் இருவர் சென்னையில் கைது
சென்னை: ஆட்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சசிகலா உறவினர் ராவணனின் கூட்டாளிகள் இருவரை போலீசார் கைது செய்து கோவைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மன்னார்குடியைச் சேர்ந்த தமிழ்மணியும் அவருடன் மற்றொரு நபரும் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் சிறுமுகையைச் சேர்ந்த காண்ட்ராக்டர் ரவிக்குமாரை மிரட்டி ராவணனும் அவரது கூட்டாளிகளும் அணம் அறித்தனர் என்பது குற்றச்சாட்டு.
பிடிபட்டுள்ள ராவணனின் கூட்டாளிகள் இருவருக்கும் ரவிக்குமார் கடத்தல் சம்பவத்தில் தொடர்பிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே கோவை மத்திய சிறையில் உள்ள ராவணனை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.
மேலும் ராவணன் மீது கொலை, மோசடிப் புகார்களும் நாள்தோறும் குவிந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications