பஞ்சாயத்து தலைவி வீட்டுக்கு தீ வைபபு- 8 பஞ்சாயத்து தலைவர்கள் பாதுகாப்பு கேட்டு கலெக்டரிடம் மனு
நெல்லை: பாதுகாப்பு கேட்டு தென்கலம் பஞ்சாயத்து தலைவி செல்வி உள்பட 8 பஞ்சாயத்து தலைவர்கள் நெல்லை கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
தாழையூத்து அருகேயுள்ள தென்கலம் பஞ்சாயத்தில் தலைவியாக இருப்பவர் செல்வி. இவருக்கும் அதே பகுதியச் சேர்ந்த சிலருக்கும் தேர்தல் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நல்லம்மாள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் குடிநீர் குழாயில் நடந்த பணிகளை செல்வி மற்றும் அரசு அதிகாரிகள் பார்வையிட சென்றபோது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தகராறு செய்தனர். தொடர்ந்து செல்வியின் வீட்டை ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது. இது குறித்து மானூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து பஞ்சாயத்து தலைவி செல்வி உள்பட 8 பஞ்சாயத்துகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் நெல்லை கலெக்டர் செல்வராஜை சந்தித்து மனு கொடுத்தனர். மானூர் யூனியன் பகுதிக்கு உட்பட்ட பஞ்சாயத்துக்களில் உள்ள தலைவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பணிகளை பார்வையிட சென்ற தென்கலம் பஞ்சாயத்து தலைவி செல்வியிடம் தகராறு செய்ததுடன் அவரது வீடும் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. எனவே பஞ்சாயத்து தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications