செல்போன் எண்களுடன் பெண்களின் நிர்வாண போஸ்டர்கள்: ம.பி.யில் பரபரப்பு
இந்தூர்: இந்தூரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் விஷமிகள் செல்போன் எண்களுடன் கூடிய பெண்களின் நிர்வாணப் படம் உள்ள போஸ்டர்களை ஒட்டியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு டுகோகஞ்ச் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள ரீகல் ஸ்கொயர் பகுதி, பல்கலைக்கழக சுவர், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் விஷமிகள் செல்போன் எண்களுடன் கூடிய பெண்களின் நிர்வாணப் படம் உள்ள போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த போஸ்டர்களை அகற்றினர். இருப்பினும் அவற்றை ஒட்டியது யார் என்பது இன்னும் தெரியவில்லை. யாராவது காதல் தோல்வியடைந்தவர்கள் அந்த பெண்களைப் பழிவாங்க அவ்வாறு செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்து டிஎஸ்பி ஜிதேந்திர சிங் கூறியதாவது,
இந்த போஸ்டர்களை ஒட்டியவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருக்கக்கூடும். அனைத்து போஸ்டர்களிலும் பூஜா என்ற பெயர் அச்சிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டர்களில் உள்ள செல்போன் எண்கள் ஸ்விட் ஆப் செய்யப்படாமல் உள்ளது ஆச்சரியமாக உள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications