சிறிய நாடுகளை அமெரிக்கா தண்டிக்கிறதாம், சொல்லிப் புலம்புகிறார் ராஜபக்சே
Subscribe to Oneindia Tamil

கொழும்பில் வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர், எண்ணைய் வளத்தில் ஈரானை மட்டுமே இலங்கை சார்ந்திருப்பதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையின் எண்ணைய் தேவையில் 93 சதவீதத்தை ஈரானே வழங்குவதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.
ஈரானுக்கு எதிரான நடவடிக்கை மூலமாக அந்நாட்டை மட்டும் அமெரிக்கா மற்றும் மேற்குல நாடுகள் தண்டிக்கவில்லை. எங்களைப் போன்ற சிறிய நாடுகளும் தண்டனைக்குள்ளாகியிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவின் உதவியை நாட உள்ளதாகவும் குறிப்பாக அமெரிக்காவின் தடைக்கு எதிராக இந்தியா பின்பற்றக் கூடிய வழிமுறைகளை பின்பற்ற உத்தேசித்துள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications