திவாகரன் ஜாமீன் மனு தள்ளுபடி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சசிகலாவின் தம்பி திவாகரனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
சசிகலாவின் தம்பி திவாகரன், நீடாமங்கலம் அருகே ரிஷியூர் கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்ணின் வீட்டை இடித்து தரை மட்டமாக்கியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் திவாகரனை போலீசார் தேடி வந்தனர்.
அதனால் முன் ஜாமீன் கேட்டு, உயர்நீதிமன்றத்தில் திவாகரன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சுந்தரேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. முன் ஜாமீன் வழங்க, அரசு தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு விசாரணைக்குப் பிறகு திவாகரனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி.
இதற்கிடையே இன்று காலை திவாகரன் சேலம் அருகே கைதாகிவிட்டதாக தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications