சென்னையில் நேற்றிரவு முக்கால் மணி நேரம் நல்ல மழை!
சென்னை: சென்னை நகரிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் நேற்று இரவு திடீரென பெய்த மழையால் மக்கள் வியப்படைந்தனர். இந்த மழையால் நகரின் பல இடங்களில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
தமிழகத்தில் தற்போது வட கிழக்குப் பருவ மழைக்காலம் முடிந்து விட்டது. இருப்பினும் பருவக் காற்றுக்காலம் இன்னும் முடியவில்லை என்று ஏற்கனவே வானிலை மையம் அறிவித்துள்ளது.
சமீ்ப நாட்களாக தமிழகத்தில் பனி அதிகமாகவே இருந்து வருகிறது. மாலையில் ஆரம்பித்து காலை வரை பனியின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையில் சில நாட்களாக பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இதனால் மழை வருமோ என்று மக்கள் நினைத்திருந்த நேரத்தில் நேற்று நள்ளிரவுக்கு மேல் திடீரென மழை பெய்தது.
சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும், போரூர், பூந்தமல்லி, தாம்பரம், குரோம்பேட்டை, அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த மழை பெய்தது. சுமார் முக்கால் மணி நேரம் பெய்த இந்த மழையால் நகரே மேலும் குளிராகிப் போனது.
மழை காரணமாக நகரின் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியது. இருப்பினும் பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications