கூடங்குளம் அணு உலையை மக்கள் ஆதரிக்க வேண்டும்: இளங்கோவன் வேண்டுகோள்
நாகர்கோவில்: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் போல கூடங்குளம் அணு உலையை செயல்படுத்துவதற்கும் பொதுமக்கள் ஒருமித்த ஆதரவு தர வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், :கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்றார்.
மேலும், கூடங்குளம் பிரச்சினையில் தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கவேண்டும். இல்லையெனில் காங்கிரஸ் போராட்டம் அறிவிக்கும். உதயகுமார் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. வெளிநாட்டு பணம் கைமாறியுள்ளது. அவர்மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது என்றும் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
"அரசு நர்சிங் பணிக்கு தேர்வாணையம் மூலம் பணி வழங்கப்படும் என்ற அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. இவற்றில் எந்த பாகுபாடின்றி பணி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்..












Click it and Unblock the Notifications