எதிர்க்கட்சிகளை அதிமுக கையாளும் பாணியே தனி.. கருணாநிதி கிண்டல்!

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: எதிர்க்கட்சியினரை அதிமுக கையாளும் பாணியே தனி. அந்தப் பாணியைத்தான் இப்போதும் சட்டசபையில் கையாண்டுள்ளனர் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சட்டசபையில் இன்று அதிமுக, தேமுதிக இடையிலான மோதல் குறித்து கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கருத்துக் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில்,

சட்டசபையில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பேசுவதற்கு போதிய நேரம் வழங்கப்படுவதில்லை. எதிர்க்கட்சிகளை கையாள்வதில், அ.தி.மு.க. ஏதேச்சதிகார போக்கை முன்பு கையாண்டு வந்தது. தனி பாணியைக் கையாண்டு வரும். தற்போதும், அதையே அவர்கள் தொடர்ந்து வருகின்றனர்.

கடந்த சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க.வுடன் கூட்டணி சேர்ந்ததற்கு அ.தி.மு.க.சார்பில் கூறப்படும் காரணத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன.

மேலும் அந்த தேர்தலில், தி.மு.க.தோல்வியடையவில்லை. நாங்கள் 3வது இடத்திலேயே உள்ளோம் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+