அடுத்த நடவடிக்கை.. எம்.எல்.ஏக்களுடன் விஜயகாந்த் அவசர ஆலோசனை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபையிலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்ட பின்னணியில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தேமுதிக எம்.எல்.ஏக்களுடன் கட்சித் தலைவர் விஜயகாந்த் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
சட்டசபையில் இன்று பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வை மையமாக வைத்து அதிமுக, தேமுதிக இடையே பெரும் மோதல் வெடித்தது. இதையடுத்து தேமுதிக உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து அனைத்து எம்.எல்.ஏக்களும் கட்சித் தலைமை அலுவலகத்திற்கு விரைந்தனர். அங்கு அவர்களுடன் விஜயகாந்த் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
சட்டசபையில் அடுத்து எப்படி நடந்து கொள்வது, அரசுக்கு எதிரான தாக்குதல்களை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து எம்.எல்.ஏக்களுடன் விஜயகாந்த் ஆலோசித்ததாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications