For Daily Alerts
Just In
குடிபோதையில் இருந்த சென்னை-மதுரை ஏர் இந்தியா விமான பைலட்!
சென்னை: சென்னையிலிருந்து மதுரைக்கு ஏர் இந்தியா விமானத்தை இயக்க இருந்த பைலட் குடிபோதையில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை சென்னையிலிருந்து மதுரைக்கு ஏர் இந்தியா விமானம் செல்ல இருந்தது. அதை கேப்டன் செபாஸ்டியன் இயக்க இருந்தார்.
விமானத்தை இயக்கும் முன் நடந்த வழக்கமான உடல் பரிசோதனையின்போது செபாஸ்டியன் போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் விமானத்தை இயக்க தடை விதிக்கப்பட்டது.
அந்த விமானத்தை வேறொரு விமானி இயக்கிச் சென்றார்.
விமானப் போக்குவரத்துத்துறையின் டைரக்டர் ஜெனரல் அலுவலகத்தின் பிளைட் ஆபரேசன்ஸ் இன்ஸ்பெக்டர் என்ற பதவியிலும் செபாஸ்டியன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary
An Air india pilot was grounded in Chennai, since he was drunk. He was scheduled to operate Chennai - Madurai flight
Story first published: Friday, February 3, 2012, 14:48 [IST]