ராஜினாமா செய்ய தயாராக இருந்தேன் :ப. சிதம்பரம் கருத்து
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக ப.சிதம்பரம் கூறியுள்ளதாவது:
சுப்பிரமணிய சாமி தொடர்ந்த வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
தீர்ப்பு எனக்கு சாதகமாக இல்லாது போயிருந்தால் உடனே பதவி விலகலாம் என முடிவு செய்து டெல்லியிலேயே காத்திருந்தேன், என்றார் அவர்.
ஷைனி தீர்ப்பு வரும் வரை டெல்லியை விட்டு வெளியேறாத ப.சி. தீர்ப்பு கிடைத்தவுடன் விமானம் மூலம் மதுரைக்குப் புறப்பட்டார். மதுரைக்கு வந்த சிதம்பரத்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கூடங்குளத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நடைபெற உள்ள அணு உலை பற்றிய விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் பங்கேற்க உள்ளார்.












Click it and Unblock the Notifications