ப.சி.க்கு சாதகமான தீர்ப்பால மத்திய அரசு மீதான ஊழல் கறை மறையாது: பா.ஜ.க.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு சாதகமாக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டதாலேயே மத்திய அரசு மீதான ஊழல் கறை மறைந்துவிடாது என்று பாரதிய ஜந்தா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

பாட்டியால சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பினால் மத்திய அரசின் ஊழலுக்கு எதிரான எமது பிரச்சாரம் ஓய்ந்துவிடாது. அதேபோல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீதான ஊழல் கறையும் ம்றைந்துவிடாது.

ஐ.மு. அரசின் ஊழல்களை நாட்டு மக்களிடம் பா.ஜ.க. கொண்டு சேர்க்கும்.

தற்போது கீழ்நீதிமன்றம்தான் சிதம்பரத்துக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளது. இன்னமும் 2 மேல் நீதிமன்றங்கள் இருக்கின்றன. ப.சிதம்பரத்துக்கு எதிரான ஆதாரங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்போம்.

ஆ. ராசா பதவி வகித்த காலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட உரிமங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதே 2ஜி ஊழலுக்கு சாட்சியாக இருக்கிறது என்றார் அவர்.

மற்றொரு மூத்த பாஜக தலைவரான ஜஸ்வந்த் சிங், பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் இந்தத் தீர்ப்போடு வழக்கு முடிந்துவிடப்போவதில்லை," என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+