Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை அரசிடம் சரத்பொன்சேகா ஒருபோதும் மன்னிப்பு கேட்கமாட்டார்: பொன்சேகா மனைவி அனோமா

Subscribe to Oneindia Tamil

Sarath Fonseka and Anoma
கொழும்பு: இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை அதிபர் மகிந்த ராஜபக்ச சிறையிலடைத்து இரண்டு ஆண்டுகள் முடிவடையும் நிலையில் அவர் ஒருபோதும் மன்னிப்பு கேட்கமாட்டார் என்று அவரது மனைவி அனோமா தெரிவித்துள்ளார்.

பொன்சேகாவை விடுதலை செய்யக் கோருவது தொடர்பாக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் அனோமா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இது தொடர்பாக அனோமா பொன்சேகா கூறியுள்ளதாவது:

பொன்சேகா விடுதலை குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வந்தாலும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சரத் பொன்சேகா மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரினால் அது நடக்காது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் சரத் எந்தத் தவறையும் செய்யவில்லை. இலங்கை அரசுக்கும் துரோகம் செய்யவில்லை. இந்த நிலையில் அவர் மன்னிப்பு கோர வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

பொன்சேகா கைது செய்யப்பட்ட நாளான பிப்ரவரி 8-ந் தேதியன்று அவரை விடுதலை செய்யக் கோரி அனோமா தலைமையில் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+