30 வயது வரை மட்டுமே திமுக இளைஞரணியில் இருக்க முடியும்-ஸ்டாலின்
சென்னை: இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி, மாற்றத்தின் காரணத்தினால் இளைஞர்களிடையே இன உணர்வு மாறி விட்டது. கலாசார மாற்றம் ஏற்பட்டாலும் அண்ணா, பெரியாரின் லட்சியத்தை இன உணர்வை என்றும் மறக்க கூடாது என்று திமுக பொருளாளரும், இளைஞரணி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
வட சென்னை மாவட்டத்தின் எழும்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், ராயபுரம், துறைமுகம், திருவிக நகர், பெரம்பூர், ஆர்கே நகர் ஆகிய பகுதிகளுக்கு இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பதவிக்கான நேர்காணல் எழும்பூர் இம்பீரியல் ஹோட்டலில் நடந்தது. திமுக பொருளாளரும், இளைஞரணித் தலைவருமான ஸ்டாலின் 550 பேரிடம் நேர்காணலை நடத்தினார். முன்னதாக அவர் பேசுகையில்,
இந்த இயக்கத்தில் இளைஞர்களுக்கு பல பொறுப்புகள் காத்திருக்கின்றன. தேர்தலில் நாம் மிகப் பெரிய தோல்வியை தழுவினோம். அதற்கு மறுக்க முடியாத ஒரு காரணம், இளைஞர்களும், மாணவர்களும் நமக்கு போதிய ஆதரவு தரவில்லை என்பதுதான்.
இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் இன உணர்வு குறைந்து கொண்டே வருகிறது. நவீன தொழில்நுட்ப மாற்றம் காரணமாக இன உணர்வு மாறிவிட்டது. இன உணர்வையும், திராவிட இயக்க லட்சியத்தையும் நாம் மறக்கக் கூடாது. கலாசார மாற்றம் ஏற்பட்டாலும் அண்ணா, பெரியாரின் லட்சியத்தை இன உணர்வை என்றும் மறக்க கூடாது.
இளைஞர் அணியில் 30 வயது வரை உள்ளவர்கள் மட்டும்தான் இருக்க முடியும். இளைஞர் அணி நியமனத்தில் எந்தப் பரிந்துரைகளும், சிபாரிசும் கிடையாது. மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுகின்றனர். இங்கு வந்திருக்கும் இளைஞர்கள் பொறுப்பு கிடைக்கவில்லை என்று ஏமாற்றம் அடைய வேண்டாம். இதில் தேர்வு செய்யப்படாதவர்கள் மாணவரணி, தொண்டரணி, வழக்குரைஞர் அணி உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்படும்
ஒருவரே தொடர்ந்து பொறுப்பில் இருக்க வேண்டும் என்ற நிலை காரணமாக மற்றவர்களுக்கு வாய்ப்பு தர முடியவில்லை. எனவேதான் நேர்காணல் மூலம் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்கிறோம். இன்று 550 பேர் மனுக்கள் தந்துள்ளனர். எந்த தவறும் இல்லாமல் முறைப்படி மதிப்பெண் அடிப்படையில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள். புதிய நிர்வாகிகள் பட்டியல் 5, 6 நாட்களில் வெளியிடப்படும்.
திமுகவில் பல்வேறு துணை அமைப்புகள் இருந்தாலும் இளைஞர் அணிதான் அதிக சிறப்பும், முதன்மையாகவும் திகழ்கிறது. இளைஞர் அணி 1980ம் ஆண்டு மதுரையில் தொடங்கப்பட்டது. இதுவரை பகுதிக்கு ஒரு அமைப்பாளரும், 2 துணை அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். இனி ஒரு அமைப்பாளர், 4 துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார் ஸ்டாலின்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications