கூர்க்காலாந்து பிரச்சனையில் இழுத்தடிக்கும் மத்திய அரசு- மமதா காட்டம்
கொல்கத்தா: டார்ஜிலிங்கில் கூடுதல் அதிகாரம் கொண்ட புதிய கூர்க்காலாந்து கவுன்சிலுக்கு அங்கீகாரம் அளிக்காமல் மத்திய அரசுதான் தாமதிக்கிறது என்று மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
கூர்க்கா முக்தி மோர்ச்சா அமைப்பின் பொதுச்செயலாளர் ரோசன் கிரி தலைமையிலான குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய மமதா இதனைத் தெரிவித்துள்ளார்.
கூர்க்காலாந்து அமைப்பினருக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையே கூடுதல் அதிகாரம் கொண்ட கூர்க்காலாந்து கவுன்சில் அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதத்தில் கையெழுத்திடப்பட்டிருந்தது.
ஆனால் மத்திய அரசு உடனே இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்கவில்லை. இது தொடர்பாக மாநில அரசிடம் பல்வேறு சந்தேகங்களை மத்திய அரசு கேட்டு வருகிறது.
இதனால் புதிய கவுன்சில் அமைப்பது நடைமுறைக்கு வரவில்லை. இதில் அதிருப்தி அடைந்த கூர்க்கா முக்தி மோர்ச்சா அமைப்பினர் மார்ச் 27-ந் தேதிக்குள் கூடுதல் அதிகாரம் கொண்ட புதிய கவுன்சிலை அமைக்க கெடு விதித்திருந்தனர்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் மமதா பானர்ஜி, இந்த விவகாரத்தில் மத்திய அரசுதான் தாமதிப்பதாகவும் போராட்டத்தை தொடங்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் கூர்க்கா முக்தி மோர்ச்சா அமைப்பின் பிரதிநிதிகளுடன் மமதா ஆலோசனை நடத்தினார்.
இந்த விவகாரம் குறித்து பிப்ரவரி 22-ந் தேதி பிரதமர் மன்மோகன்சிங்கை தாம் சந்திக்க உள்ளதாகவும் இதனால் போராட்டத்தை கைவிடுமாறும் இச்சந்திப்பின் போதும் மமதா வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பிப்ரவரி 28-ந் தேதி டார்ஜிலிங்க் நகரத்துக்கு பயணம் செய்ய இருப்பதாகவும் மமதா உறுதியளித்துள்ளார்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications