பாக்.வெளியுறவு அமைச்சரிடம் போனில் ஆபாசமாகப் பேசினாரா கர்நாடக இளைஞர்?

அமைச்சர் ஹீனாவின் செல்போனுக்கு 2 மாதங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் ஆபாச வார்த்தைகளில் உரையாடியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் அந்த அழைப்பு எங்கிருந்து வந்தது என்று ஆராய்ந்தபோது அது இந்தியாவிலிருந்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்தியபோது, ரெய்ச்சூர் மாவட்டம் சித்தானூர் தாலுகாவைச் சேர்ந்த புத்தினி என்ற குக்கிராமத்திலிருந்து அந்த அழைப்பு வந்தது தெரிய வந்தது.
கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் வரை அந்த நபர் ஆபாசன வார்த்தைகளில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இதுகுறித்து இந்திய அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். மத்திய அரசின் உத்தரவின் பேரில், பெங்களூர் மத்திய குற்றப் பிரிவு போலீஸ் படையைச் சேர்ந்த ஒரு பிரிவினர் புத்தினி கிராமத்திற்கு விரைந்தனர். அங்கு அந்த செல்போனுக்குரிய இளைஞரைப் பிடித்து ரெய்ச்சூர் கொண்டு வந்தனர்.அங்கு அவரிடம் நேற்று நீண்ட நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
சிக்கலில் மாட்டியுள்ள அந்த நபரின் பெயர் அமரேஷ். இந்த விசாரணை குறித்து அமரேஷ் கூறுகையில், ஹீனா ரப்பானி கர் என்ற பெயரை நான் கேள்விப்பட்டது கூட கிடையாது. மேலும் எனக்கு உருதும் பேசத் தெரியாது, ஆங்கிலமும் பேசத் தெரியாது. என்ன நடந்தது என்பதே எனக்குத் தெரியவில்லை, புரியவில்லை.
நான் ஒரு தனியார் பயிற்சி நிலையத்தில் பணியாற்றி வருகிறேன். ஒரு வேளை எனது நிலையத்திற்குப் படிக்க வரும் யாரேனும் இதைச் செய்திருக்கலாம் என நான் சந்தேகிக்கிறேன் என்றார்.
தீவிர விசாரணைக்குப் பின்னர் தற்போது அமரேஷை போலீஸார் விடுவித்துள்ளனர். இருப்பினும் மறு உத்தரவு வரும் வரை உங்களது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்யக் கூடாது என்று அவருக்கு போலீஸார் உத்தரவிட்டுள்ளனராம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications