பாக்.வெளியுறவு அமைச்சரிடம் போனில் ஆபாசமாகப் பேசினாரா கர்நாடக இளைஞர்?

அமைச்சர் ஹீனாவின் செல்போனுக்கு 2 மாதங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் ஆபாச வார்த்தைகளில் உரையாடியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் அந்த அழைப்பு எங்கிருந்து வந்தது என்று ஆராய்ந்தபோது அது இந்தியாவிலிருந்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்தியபோது, ரெய்ச்சூர் மாவட்டம் சித்தானூர் தாலுகாவைச் சேர்ந்த புத்தினி என்ற குக்கிராமத்திலிருந்து அந்த அழைப்பு வந்தது தெரிய வந்தது.
கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் வரை அந்த நபர் ஆபாசன வார்த்தைகளில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இதுகுறித்து இந்திய அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். மத்திய அரசின் உத்தரவின் பேரில், பெங்களூர் மத்திய குற்றப் பிரிவு போலீஸ் படையைச் சேர்ந்த ஒரு பிரிவினர் புத்தினி கிராமத்திற்கு விரைந்தனர். அங்கு அந்த செல்போனுக்குரிய இளைஞரைப் பிடித்து ரெய்ச்சூர் கொண்டு வந்தனர்.அங்கு அவரிடம் நேற்று நீண்ட நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
சிக்கலில் மாட்டியுள்ள அந்த நபரின் பெயர் அமரேஷ். இந்த விசாரணை குறித்து அமரேஷ் கூறுகையில், ஹீனா ரப்பானி கர் என்ற பெயரை நான் கேள்விப்பட்டது கூட கிடையாது. மேலும் எனக்கு உருதும் பேசத் தெரியாது, ஆங்கிலமும் பேசத் தெரியாது. என்ன நடந்தது என்பதே எனக்குத் தெரியவில்லை, புரியவில்லை.
நான் ஒரு தனியார் பயிற்சி நிலையத்தில் பணியாற்றி வருகிறேன். ஒரு வேளை எனது நிலையத்திற்குப் படிக்க வரும் யாரேனும் இதைச் செய்திருக்கலாம் என நான் சந்தேகிக்கிறேன் என்றார்.
தீவிர விசாரணைக்குப் பின்னர் தற்போது அமரேஷை போலீஸார் விடுவித்துள்ளனர். இருப்பினும் மறு உத்தரவு வரும் வரை உங்களது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்யக் கூடாது என்று அவருக்கு போலீஸார் உத்தரவிட்டுள்ளனராம்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications