கரூர் மாவட்ட செயலாளர் தேர்தல்: தேமுதிகவில் மும்முனைப் போட்டி
கரூர்: தேமுதிக கரூர் மாவட்ட செயலாளர் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவி வருகின்றது.
தேமுதிக உட்கட்சி தேர்தல் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. கிளை செயலாளர் முதல் நகரம், ஒன்றியம், மாவட்ட செயலாளர்கள் தேர்வு நடைபெற்று வருகின்றது.
பல்வேறு மாவட்டங்களில் பலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால் தேமுதிக கரூர் மாவட்ட செயலாளர் பதவிக்கு மூன்று பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். தற்போதைய மாவட்டச் செயலாளர் என்.எஸ்.கிருஷ்ணன், முன்னாள் மாவட்டச் செயலாளர் விஸ்வநாதன், பொதுக்குழு உறுப்பினர் வி.ஆர்.எஸ். என மூன்று பேர் களத்தில் உள்ளனர். இதனால் கரூர் மாவட்ட தேமுதிக தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவி வருகின்றது.
கடும் போட்டி நிலவுவதால் இவர்களில் ஒருவரை கேப்டன் விஜயகாந்தே மாவட்ட செயலாளராக தேர்வு செய்து அறிவிப்பு வெளிடுவார் என்கின்றது தேமுதிக வட்டாரம்.