வாய் பேச முடியாதவரின் மனைவியை அபகரித்த எஸ்.ஐ.: மீட்டுத் தரக்கோரி புகார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: எஸ்.ஐ. பெருமாள்ராஜ் என்பவர் தனது மனைவியுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும், அவரிடம் இருந்து தனது மனைவியை மீட்டுத் தருமாறும் மதுரையைச் சேர்நத் வாய் பேச முடியாத மெக்கானிக் ஒருவர் தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ்தாஸிடம் புகார் மனு அளித்துள்ளார்.

மதுரை செல்லூர் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் துரை. வாய் பேச முடியாத அவர் மெக்கானிக்காக உள்ளார். இந்த நிலையில் அவர் தென் மண்டல ஐ.ஜி ராஜேஷ்தாஸிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

நான் மதுரை செல்லூர் மீனாட்சிபுரத்தில் வசித்து வருகின்றேன். மெக்கானிக்காக பணிபுரிகிறேன். எனனால் வாய் பேச முடியாது. இந்த நிலையில் எனது மனைவி காளீஸ்வரியுடன் கடந்த 2009 ம் ஆண்டு முதல் எஸ்.ஐ. பெருமாள்ராஜ் என்பவர் தொடர்பு வைத்துக் கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றார்.

இதை அறிந்து இது குறித்து அவரிடம் கேட்டபோது அவர் என்னை தாக்கினார். எனவே, என்னைத் தாக்கிய எஸ்.ஐ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவரிடம் சிக்கியுள்ள எனது மனைவியை மீட்டுத்தர வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு குறித்து விசாரணை நடத்துமாறு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் திருநாவுக்கரசுக்கு ஐ.ஜி. உத்தரவிட்டார். ஆனால் இந்த புகாரை பெருமாள்ராஜும், துரையின் மனைவி காளீஸ்வரியும் மறுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+