ரூ.1 கோடி பறிமுதல்: பிரதீபா பாட்டில் மகனுக்கு நோட்டீஸ்
அமராவதி: அமராவதி மாவட்டத்தில் நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக குடியரசுத தலைவர் பிரதீபா பாட்டீலின் மகனும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ராவ்சாஹேப் ஷெகாவத் மற்றும் பல காங்கிரஸ் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை வரும் 21ம் தேதி நடக்கிறது.
மும்பை மாநகராட்சி தேர்தல் நேற்று நடந்தது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி இரவு அமராவதி மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வழியாகச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நாக்பூரைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த பணம் வறுமையில் வாடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டதாகவும், அது ஒன்றும் வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்துச் செல்லப்படவில்லை என்றும் குடியரசுத தலைவர் பிரதீபா பாட்டீலின் மகனும், அமராவதி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ராவ்சாஹேப் ஷெகாவத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
வறுமையில் வாடும் கட்சி வேட்பாளர்கள் 87 பேருக்கு உதவ காங்கிரஸ் கமிட்டியிடம் நிதி கேட்டேன். அந்த 87 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் வழங்க ரூ.1 கோடி நிதியை எனக்கு அனுப்பி வைத்தனர் என்றார்.
ஆனால் இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்கவே எடுத்துச் செல்லப்பட்டதாக பாஜக புகார் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் ப்ரித்விராஜ் சவான் மற்றும் காங்கிரஸார் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்றனர் என்று அது மேலும் குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்பிக்குமாறு தேர்தல் ஆணையம் அமராவதி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஷெகாவத் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடம் வரும் 21ம் தேதி் விசாரணை நடத்தப்படவிருக்கின்றது.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications