தலைசிறந்த கைவினைக் கலைஞர்களுக்கான தேசிய விருது போட்டி: விண்ணப்பங்கள் வரவேற்பு
புதுச்சேரி: சிறந்த கைவினைக் கலைஞர்களுக்கு தேசிய விருது அளிப்பதற்காக நடத்தப்படும் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் கலைஞர்கள் வரும் மே 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் கைவினைப் பொருட்கள் அபிவிருந்தி துறை சார்பில் ஆண்டுத்தோறும் தலைசிறந்த கைவினைக் கலைஞர்களுக்கான தேசிய விருது போட்டி நடத்தப்படுகின்றது. அதன் மூலம் தேர்வு செய்யப்படுவர்களுக்கு விருது வழங்கப்படுகின்றது.
இப்போட்டியில் வெற்றி பெறும் கைவினைக் கலைஞர்களை கவுரவப்படுத்தும் வகையில் மத்திய அரசின் தாமிரபத்திரம், ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் அங்கவஸ்திரம் ஆகியவை வழங்கப்படும். தேசிய மெரிட் சான்றிதழ் பெறுபவருக்கு ரூ.50,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படுகின்றது.
இப்போட்டியில் கலந்து கொள்ளும் கைவினைக் கலைஞர்கள் தங்களது அரிய படைப்பை உரிய விண்ணப்பத்துடன்,
உதவி இயக்குநர் (கைவினைப் பொருட்கள்),
கைவினைப் பொருட்கள் விற்பனை மற்றும் சேவை விரிவாக்க மையம்,
எண். 14, பொன் நகர் மெயின்ரோடு,
ரெட்டியார்பாளையம்,
பாண்டிச்சேரி - 605 010,
தொலைபேசி எண் : 0413 - 2206615.
என்ற முகவரியில் அல்லது மாவட்ட தொழில் மைய பொது மேலாளரிடம் 21.5.2012 க்குள் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் போட்டியில் கலந்து கொள்ளும் கைவினைக் கலைஞர்கள் தமது அரிய படைப்பின் பணி மேற்கொள்ளும் சமயத்தில் மேற்கண்ட முகவரியில் தெரிவித்தால், தங்கள் படைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்து சான்று அளிக்க ஏதுவாக இருக்கும். மேலும் தேவைப்பட்டால் தக்க ஆலோசனை வழங்கப்படும் என்று கைவினைப் பொருட்கள் உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications