கரூர் மாவட்ட தேமுதிக மாவட்டட செயலாளர் தேர்தல் - என்.எஸ். கிருஷ்ணன் வெற்றி
கரூர்: தேமுதிக உட்கட்சி தேர்தலில், கரூர் மாவட்ட செயலாளரான என்.எஸ் கிருஷ்ணன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேமுதிக உட்கட்சி தேர்தல் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. கிளை செயலாளர் முதல் நகரம், ஒன்றியம், மாவட்டம் செயலாளர் வரை தேர்தல் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர் பதவி்க்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பலர் மாவட்டச் செயலாளர் பதவியை குறித்து போட்டியிடிட்டனர்.
அதன்படி கரூர் மாவட்ட செயலாளர் பதவிக்கு தற்போதைய மாவட்டச் செயலாளர் என்.எஸ்.கிருஷ்ணன், முன்னாள் மாவட்டச் செயலாளர் விஸ்வநாதன், பொதுக் குழு உறுப்பினர் வி.ஆர்.எஸ் ஆகிய 3 பேர் போட்டியி்ட்டனர். தேர்தல் பொறுப்பாளராக மாநில பட்டதாரி அணி செயலாளர் ரவீந்திரன் செயல்பட்டார்.
இதில் தற்போதைய மாவட்டச் செயலாளர் என்.எஸ். கிருஷ்ணன் வெற்றி பெற்றார். இதனால் அவரை மீண்டும் கரூர் மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளதகாவும் தேமுதிக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் வெற்றி பெற்ற மாவட்டச் செயலாளர் லிஸ்ட் வெளியிட்டப்பட்டு வருகின்றது.












Click it and Unblock the Notifications