நடராஜனைத் தொடர்ந்து அண்ணன் சாமிநாதனையும் கைது செய்ய போலீஸ் தீவிரம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: நடராஜன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்து அவரது அண்ணன் சாமிநாதனையும் கைது செய்ய போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நில அபகரிப்பு வழக்கில் நடராஜன் நேற்று இரவு தஞ்சாவூர் போலீஸாரால் கைது செய்யபப்பட்டார். அவரோடு, அக்காள் மகன் சின்னையா என்கிற வெங்கடேசன், கூட்டாளிகளான சுரேஷ், குபேந்திரன், மாரிமுத்து, இளவழகன் ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் நேற்று இரவு நடராஜன் சென்னையில் கைது செய்யப்பட்டார். இன்று காலை விளார் கிராமத்தில் வைத்து குபேந்திரன் மற்றும் சின்னையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தற்போது சாமிநாதனையும், மற்ற நால்வரையும் பிடிக்க போலீஸார் தீவிர வேட்டை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications