உதயகுமாரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: டாக்டர் சேதுராமன் வலியுறுத்தல்
சென்னை: கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக வேண்டும் என்றே தொடர்ந்து பேராட்டம் நடத்தும் உதயகுமார் போன்றவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கூடங்குளம் பகுதி மக்களின் அச்சத்தை போக்க மத்திய அரசு நிபுணர் குழுவை அமைத்து போராட்டக்காரர்களுடன் 4 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது.
தமிழக முதல்வர் அனுப்பிய நிபுணர் குழு போராட்டக்காரர்களுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி, அணுமின் நிலையம் விரைவில் செயல்பட வழிவகை செய்துள்ளது. அறிவியல் பிரச்சனையை அறிவியல் அறிஞர்கள் மூலமாகவே அணுக வேண்டும். இதைத் தான் தமிழக அரசு செய்துள்ளது.
கடுமையான மின்தடையால் தமிழகத்தின் தொழில் துறையில் பல முட்டுக்கட்டைகள் ஏற்பட்டுள்ளன. திருப்பூர், கோவை பகுதியில் இருந்து குஜராத், மேற்குவங்க மாநிலங்களுக்கு தொழிலை மாற்றி வருகின்றனர். இதனால் பல லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகி வருகிறது. இதை தவிர்க்க கூடங்குளம் அணுமின் சக்தி அவசியம் என்பதை உணர வேண்டும். ரூ. 15,000 கோடி முதலீட்டில் கட்டப்பட்டுள்ள அணுமின் நிலையம் செயல்படாததால் மாதம் ரூ.750 கோடி இழப்பு ஏற்படுகிறது.
இன்றைக்கு உதித்த உதயகுமார் நேற்று முளைத்த காளான். ஏழை, எளிய மக்களை திசை திருப்பி தினசரி ரூ.100 கூலி கொடுத்து கூடங்குளத்தில் வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலால் போராட்டம் நடத்தி வருகின்றார்.
தமிழக நிபுணர் குழுவின் அறிக்கையை அமல்படுத்தவிடாமல் உதயகுமார் போன்றவர்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டால் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அதுதானே, புதிதாக ஒரு 'காளாண்' முளைத்தால் 'பழைய காளாண்'களுக்குப் பிடிக்காதே...!












Click it and Unblock the Notifications