Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கணவன்களுடன் போய் வாழ மறுத்து பிடிவாதம் பிடித்த மகள்களால் தாய் தீக்குளித்து தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கணவன்களிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்த மகள்கள் மீண்டும் புகுந்த வீட்டுக்கு போக மறுத்ததால் மனம் உடைந்த தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை அயனாவரம் குருவப்பா தெருவைச் சேர்ந்தவர் தாஸ். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். அவருடைய மனைவி கமலா (57). அவர்களுக்கு புளோரா, ரோஸி என்ற 2 மகள்களும், 4 மகன்களும் உள்ளனர். 2 மகள்களும் திருமணமானவர்கள்.

இந்நிலையில் புளோரா கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். மகளின் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்று கமலா நொந்து கொண்டிருக்கையில் இளைய மகள் ரோஸியும் தனது கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

2 மகள்களையும் கணவன்மார்களுடன் சேர்ந்து வாழுமாறு அவர் வலியுறுத்தினார். ஆனால் அவர்கள் புகுந்த வீட்டிற்கு செல்ல மறுத்துவிட்டனர்.

இதனால் மனம் உடைந்த அவர் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்தார். இதைப் பார்த்த அவரது மகன் பாஸ்கரன் தாயைக் காப்பாற்றச் சென்று காயம் அடைந்தார். காயம் அடைந்த தாயும், மகனும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கமலா பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து அயனாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாஸ்கரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+