Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய குடியரசுத் தலைவர்களிலேயே மிகவும் கருணையானவர் பிரதீபா

Subscribe to Oneindia Tamil

Pratibha Patil
டெல்லி: கடந்த 30 ஆண்டுகளாக இருந்த குடியரசுத் தலைவர்களிலேயே பிரதீபா பாட்டீல் தான் மிகவும் கருணை உள்ளம் படைத்தவராக உள்ளார். அவர் 23 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைததுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1981ம் ஆண்டில் இருந்து இதுவரை அளிக்கப்பட்ட கருணை மனுக்களில் 90 சதவீத மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தான் பரிசீலித்து தண்டனையைக் குறைத்துள்ளார். தன்னுடைய நலனுக்காக 9 வயது சிறுவனை பலி கொடுத்த ஜார்க்கண்டைச் சேர்ந்த சுஷில் மர்முவின் கருணை மனு கடந்த 2004ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்தது. கடந்த 9ம் தேதி அந்த மனுவை பிரதீபா பாட்டீல் ஏற்றுக் கொண்டார் என்பது தகவல் அறியும் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த 1981ம் ஆண்டு முதல் இதுவரை 91 குற்றவாளிகள் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு கொடுத்துள்ளனர். அதில் 31 பேரின் மனுக்கள் தான் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதில் 23 பேரின் மனுக்கள் பிரதீபா பாட்டீலின் பதவிக்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 18 மனுக்கள் நிலுவையில் உள்ளன. பிரதீபா இதுவரை 5 பேரின் கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். அதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்ற 3 பேரின் மனுக்களும் அடக்கம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+