யுஎஸ்-வேலைக்காரப் பெண்ணை கொடுமைப்படுத்திய இந்திய அதிகாரிக்கு ரூ.7 கோடி அபராதம்
டெல்லி: அமெரிக்காவில் வேலைக்காரப் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய இந்திய அதிகாரிக்கு ரூ.7 கோடியே 35 லட்சம் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் வசிப்பவர் இந்திய தூதரக அதிகாரி நீனா மல்ஹோத்ரா. அவரும், அவரது கணவர் ஜோகேஷும் சேர்ந்து தங்களது வீட்டில் வேலை பார்த்த இந்திய பெண் சாந்தியின் பாஸ்போர்ட், விசாவை பறித்து வைத்துக் கொண்டு சம்பளமும் கொடுக்காமல் வேலை வாங்கியுள்ளனர். தங்களுக்கு தெரியாமல் வெளியே எங்கும் தப்பித்துச் சென்றால் அவரைப் பிடித்து கைது செய்து, அடித்து, கற்பழிக்கச் செய்து இந்தியாவுக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டி வைத்துள்ளனர்.
இது போன்று மிரட்டி சாந்தியை 3 ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் வைத்துள்ளனர். அங்கிருந்து வெளியேறிய சாந்தி அமெரிக்க நீதிமன்றத்தில் கடந்த 2010ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதற்காக மல்ஹோத்ரா ரூ.7 கோடியே 35 லட்சம் அபராதம் கெட்ட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஆனால் மூத்த இந்திய அதிகாரிக்கு எதிரான இந்த குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பாக உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications