29ம் தேதி பெங்களூரில் ராபின் சர்மா: நுழைவுச் சீட்டுக்கு முந்துங்கள்
பெங்களூர்: ஆன்லைன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள தொழில் அதிபர்களுக்கு கடன் வழங்கும் ரங் தே அமைப்பின் 4வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி வரும் 29ம் தேதி பெங்களூர் தாஜ் விவான்டா ஹோட்டலில் லீடர்ஷிப் குரு ராபின் சர்மா உரை நிகழ்த்தவிருக்கிறார்.
பிசினஸ் குரு ராபின் சர்மா தனது புத்தகமான 'தி லீடர் ஹு ஹேட் நோ டைட்டில்' என்ற புத்தக்த்தின் அடிப்படையில் கருத்தரங்கில் பேசுகிறார். உலகின் தலைசிறந்த நிறுவனங்களைச் சேர்ந்த சிறந்த பணியாளர்கள் கையாளும் யுத்திகளை கருத்தரங்கில் கலந்து கொள்பவர்களுக்கு அவர் கற்றுக் கொடுக்கிறார். மேலும் சிறப்பாக பணியாற்ற உதவும் வழிமுறைகள், இன்னும் சிறப்பாக செயல்பட உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்கள் கையாளும் யுத்திகள், எந்த நிலையிலும் உறுதியாக இருக்கத் தேவையான அறிவுரைகள், எப்படி சிறப்பாக பணியாற்றி மக்களை கவர்வது, எப்படி வாய்ப்புகளைக் கண்டறிந்து பயன்படுத்திக் கொள்வது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் விளக்கவுரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சி நிறுவனங்கள், தொழில் முனைவோர், மாணவர்கள் மற்றும் பணியிலும், தனிப்பட்ட வாழ்விலும் தலைவர்களாக இருக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது. http://bit.ly/y3Atgq வலைத்தளத்தில் மீதமுள்ள மிகக் குறைவான டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளளாம். இது குறித்து மேலும் தகவல் அறிய அதிதி 9591527628 , [email protected] மற்றும் ஸ்மிதா 9686114608, [email protected] ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
உலகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ராபின் சர்மா இந்த ஆண்டு இந்தியாவில் இந்த ஒரேயொரு நிகழ்ச்சியில் மட்டும் தான் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications