உலகிலேயே மிகப் பெரிய ஏர்போர்ட் - பீஜிங்கில் கட்ட சீனா அரசு திட்டம்
பீஜிங்: உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தை பீஜிங் நகரில் அமைக்க சீனா அரசு திட்டமிட்டு உள்ளதாக அந்நாட்டு வானொலி நிலையம் அறிவித்துள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய விமான நிலையமாக, அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள ஹார்ட்ஸ்பீல்டு - ஜாக்சன் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையி்ல் சீனாவின் பீஜிங் நகரில் இருந்து தென் கிழக்கு திசையில் 45 கி.மீ. தூரத்தில் லாங்பாங் நகரின் எல்லையில் உலகிலேயே மிகப் பெரிய விமான நிலையத்தை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது.
இதில் 9 ஓடுப்பாதைகளை அமைத்து, ஆண்டுக்கு 13 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் மொத்தம் 15 மில்லியன் டாலர் செலவில் புதிய விமான நிலையம் கட்டப்பட உள்ளது. மேலும் இங்கு ஆண்டுக்கு 55 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட உள்ளது.
ஏற்கனவே பீஜிங்கில் சர்வதேச விமான நிலையமும், நான்யுவான் விமான நிலையமும் உள்ள நிலையில், புதிய விமான நிலையம் கட்டப்பட்டு அதற்கு முக்கிய நெடுஞ்சாலைகள், கிராமப்புற சாலைகள், சரக்கு போக்குவரத்து சாலைகள் ஆகியவைற்றை இணைக்கப்பட உள்ளது. ஆனால் புதிய விமான நிலையத்திற்கு பெயர் எதுவும் சூட்டப்படவில்லை. மேற்கண்ட தகவலை சீனா சர்வதேச வானொலி நிலையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications