டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை அதிகரிக்கக் கூடாது: பாரிவேந்தர் கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

TASMAC
சென்னை: டாஸ்மாக் மதுபானக் கடைகளின் விற்பனை நேரத்தை அதிகரிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்' என்று இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில், தினசரி மது அருந்துவோரின் எண்ணிக்கை 49 இலட்சம். அதில்,45 விழுக்காட்டினர் பிளஸ் 2 மாணவர்கள் என்பது அதிர்ச்சிக்குரிய தகவல்.

மதுபான விற்பனையால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு 20 ஆயிரத்து 100 கோடி வருமானம் கிடைக்கிறது. அந்த வருமானத்தைவிட, குடிபழக்கத்தால் ஏற்படும் வேலை இழப்பு, உற்பத்தி இழப்பு, உயிரிழப்பு உள்ளிட்டவைகளால் பல மடங்கிற்கு இழப்புகள் ஏற்படுகின்றன.

எனவே, டாஸ்மாக் கடைகளை நடத்துவதற்கான காரணத்தை நியாயப்படுத்துவதை விட்டுவிட்டு, அரசுக்கு வருவாய் தரும் நிதி ஆதாரங்களில் நடைபெறும் முறைகேடுகளை சரி செய்தால், டாஸ்மாக் மதுக்கடை வருமானத்தைவிட பல மடங்கு வருவாயை ஈட்ட முடியும்.

டாஸ்மாக் கடைகளுக்கிடையேயான தூரத்தினை குறைந்தபட்சமாக 5 கி.மீ., என முதல் கட்டமாக அரசு கொண்டுவரவேண்டும். டாஸ்மாக் கடைகளை காலை 1 மணி நேரம், இரவு 1 மணி நேரம் அதிகரிக்கும் திட்டத்தை உடனடியாக அரசு கைவிட்டு, சுகாதாரமான அரசாக ஆட்சி செய்யவும், அதன் மூலம் மக்கள் சுகாதாரமாக வாழ்ந்திட வழி செய்திடும் முயற்சியில் அரசு ஈடுபடுமேயானால், அதனை இந்திய ஜனநாயக கட்சி மனதார வரவேற்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+