சம்பளப் பாக்கிக்காக வருத்தப்படுகிறேன், ஆனால் மீடியாக்கள் செய்வது சரியல்ல-மல்லையா

கிங்பிஷர் நிறுவனம் பெரும் சிக்கலில் சிக்கித் தவித்து வருகிறது. சம்பளப் பாக்கி உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஏராளமானோர் கம்பெனியை விட்டு விலகி வருகின்றனர். இதனால் தனது விமான சேவையை படிப்படியாக நிறுத்தி வருகிறது கிங்பிஷர். பல விமானங்களை அது ரத்து செய்ததால் பரபரப்பும் ஏற்பட்டது.
இந்த நிலையில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதத்தை அனுப்பியுள்ளார் மல்லையா. அதில் சம்பளப் பாக்கி குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சம்பளப் பாக்கி அதிகரித்திருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு பெரும் வேதனை தருகிறது. இருப்பினும் நிதியாதாரங்களை நான் ஏற்பாடு செய்து வருகிறேன்.
வருமான வரித்துறையினர் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்திருப்பதால்தான் நிறுவனம் செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் நான் மீடியாக்கள் குறித்தும் சொல்ல வேண்டியுள்ளது. நிறுவனத்தின் துயரங்கள் குறித்து மீடியாக்களும், காசு வாங்கிக் கொண்டு செய்தி வெளியிடும் மீடியாக்களும் பொறுப்பே இல்லாமல் அணுகுகின்றன. அவர்கள் சொல்லும் செய்திகளில் பாதி கதை, மீதிதான் உண்மை. நினைத்தபடி எழுதுகிறார்கள். தங்களது சுயலாபத்திற்காக, பரபரப்பை ஏற்படுத்துவதற்காக பொய்யைக் கலந்து எழுதுகின்றனர்.
நிறுவனத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க ஓய்வே இல்லாமல் தொடர்ந்து முயன்று வருகிறேன். தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று வருகிறேன். அடுத்த வாரத்திற்குள் எனது முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.
வரிகள் முழுவதையும் கட்ட நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். அதேபோல சம்பளப் பாக்கியையும் நாங்கள் முழுமையாக சரி செய்து விடுவோம்.
பொது நலனைக் கருத்தில் கொண்டு நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம். நிறுவனத்தின் தற்போதைய சிக்கலான நிலையிலும் எங்களுடன் துணை நிற்கும் அனைவருக்கும் உரிய கெளரவத்தையும், பரிசையும் நான் அளிப்பேன். உண்மையான நம்பிக்கை மற்றும் விசுவாசத்துடன் செயல்படும் யாரையும் நான் கைவிட மாட்டேன் என்று கூறியுள்ளார் மல்லையா.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications