வரி ஏய்ப்பிலும் பல ஆயிரம் கோடி பார்த்திருக்கும் 2ஜி நிறுவனங்கள்!

வோடஃபோன் நிறுவனம் செலுத்த வேண்டிய 11,000 கோடி வருமான வரி தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ""வெளிநாடுகளில் நடந்த பரிமாற்றத்துக்கு இந்தியாவில் வரி செலுத்த வேண்டியதில்லை'' என்று தீர்ப்பளித்திருப்பதால், வரி ஏய்ப்பு மோசடியை எப்படி தண்டிப்பது, வரியை எப்படி வசூலிப்பது என்று வருமான வரித்துறை ஆய்வு செய்து வருகிறது.
மோசடி எப்படி?
இந்தியாவில் தொழில் செய்யும் "டெலிகாம்' நிறுவனங்கள் வெளிநாடுகளில் ஈட்டும் லாபத்தை, மூலதன ஆதாயமாகக் கருதித்தான் வருமான வரித்துறை வரி விதிக்கிறது. ஆனால் 2ஜி சேவை அளிக்க உரிமம் பெற்றுள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் இருந்தாலும் அவற்றின் பணப் பரிமாற்றங்கள் வெளிநாடுகளில்தான் நடைபெறுகின்றன. அவை மிகவும் சாதுர்யமாகச் செயல்பட்டு இந்திய அரசின் வரிவிதிப்பு எல்லையைத் தவிர்க்கின்றன.
அதுமட்டும் அல்லாமல், மோரிஷஸ் நாட்டுடன் இந்தியா செய்துகொண்டுள்ள இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை இந்த நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.
பங்குகளின் உரிமையை மாற்றிக் கொண்டும், பெருந்தொகையைக் கடனாகப் பெற்றிருப்பதாகக் கணக்கு காட்டியும், ஏற்கெனவே வாங்கிய கடன் மீது மேலும் கடன் வாங்கியதைப்போல கணக்கு கொடுத்தும், அடித்தளக் கட்டமைப்புக்குச் செலவிட்டதைப்போல கணக்கு எழுதியும் வரி செலுத்துவதைத் தவிர்க்கப் பார்க்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
வோடஃபோன் வழக்கு
வோடஃபோன் வருமான வரி பாக்கி வழக்கில் உச்ச நீதிமன்றம் அந்த நிறுவனத்துக்குச் சாதகமாக அளித்துள்ள தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வருமான வரித்துறை மனு தாக்கல் செய்திருக்கிறது.
அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது இந்த நிறுவனங்களின் உத்தியை விளக்க முடிவு செய்துள்ளது துறை. சொலிசிட்டர் ஜெனரல் ரோஹிங்டன் நாரிமன் இதற்கான தயாரிப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
வோடஃபோன் நிறுவனம் செலுத்த வேண்டிய 11,000 கோடி ரூபாய் வருமான வரி கிடைக்காமல் போனதல்லாமல், பிற நிறுவனங்களும் அதே வகையில் சொல்லி வரி செலுத்தாமல் தப்பித்துவிடும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications