ஆரம்பத்தில் கொள்கையுடன் இருந்தோம், திமுக, அதிமுகவுடன் சேர்ந்த பின் விட்டு விட்டோம்- ராமதாஸ்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பா.ம.க. செயல்வீரர்கள் கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கொண்டு ராமதாஸ் பேசுகையில்,
2016-ல் பா.ம.க. ஆட்சி அமைய புதிய செயல் திட்டத்தின்படி அனைவரும் செயல்பட வேண்டும். மாற்றுக் கட்சியில் இருக்கும் வன்னியர்களை பா.ம.க-விற்குக் கொண்டு வர வேண்டும். தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய 2 திராவிட கட்சிகளுக்கு அடுத்து பலம் கொண்ட கட்சியாக பா.ம.க. உள்ளது.
1980-ம் ஆண்டு வன்னியர் சங்கம் 2 கொள்கைகளுக்காகத் தொடங்கப்பட்டது. ஒன்று வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு, மற்றொன்று வன்னியர் நாட்டை ஆள வேண்டும். இதில் இட ஒதுக்கீட்டை போராடி பெற்றோம். பின்னர், தி.மு.க, அ.தி.மு.க. உடன் கூட்டணி வைத்து கொள்கையை விட்டு விட்டோம்.
பா.ம.க-வை ஒழிப்பதில் தி.மு.க,அ.தி.மு.க-விற்கும் கூட்டணி உள்ளது. இதனை கடந்த எம்.பி. தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலில் கண்டோம். எனவே கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் பா.ம.க. தனித்துப் போட்டியிடுவது என்று முடிவடுத்தோம் என்றார் அவர்.