கணவருடன் வாழ விடாமல் தடுக்கிறார்- சங்கரன்கோவில் அதிமுக வேட்பாளரின் தந்தை மீது மருமகள் புகார்

திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி மீது அவரது 2வது மனைவி டாக்டர் ராணி புகார் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இருப்பினும் தேர்தலில் பரஞ்ஜோதி ஜெயித்தார், பின்னர் அமைச்சரும் ஆனார்.ஆனால் ராணியின் புகார் வலுவானதாக இருந்ததால் அமைச்சர் பதவியை இழந்தார்.
இந்த நிலையில், சங்கரன்கோவில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வியின் குடும்பத்திற்கு ஒரு சிக்கல் வந்துள்ளது. முத்துச்செல்வியின் சகோதரர் இளையராஜா. இவரது மனைவி சமுத்திரக்கனி. இவர் நெல்லை மாவட்ட எஸ்.பி.யை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
அதில்,எனது கணவர் இளையராஜா. இவருக்கும், எனக்கும் கடந்த மே மாதம் கல்யாணம் நடந்தது. ஆனால் கல்யாணத்திற்குப் பின்னர் என்னையும், எனது கணவரையும் அவரது தந்தை சங்கரலிங்கம் சேர்ந்து வாழ விடவில்லை. மேலும், நான் எனது கணவருடன் வசித்து வந்த வீட்டையும் பூட்டி விட்டார்.
என்னை எனது கணவருடன் சேர்ந்து வாழ அனுமதிக்காமல் தடுத்து வரும் சங்கரலிங்கம் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து விசாரிக்குமாறு சங்கரன்கோவில் மகளிர் போலீஸாருக்கு எஸ்பி உத்தரவிட்டதன் பேரில் தற்போது போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சங்கரலிங்கம் முன்னாள் எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது. முத்துலட்சுமியின் தந்தை மீது அவரது மருமகள் கொடுத்துள்ள புகாரால் அதிமுக வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications